2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

உபதிஸ்ஸ கிராமத்திற்கு 459 இலட்சம் ரூபா செலவில் மின்சாரம்

Super User   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

தந்தரிமலை, உபதிஸ்ஸ கிராமத்திற்கு 459 இலட்சம் ரூபா செலவில் மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என வட மத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

ஜனாதபதியின் ஆலோசனைப்படி தந்திரிமலை, உபதிஸ்ஸ கிராமத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் கீழ் உபதிஸ்ஸ கிராமத்தில் குடிநீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி, குளங்கள் புனர்நிர்மானம், வறுமை ஒழிப்புத் திட்டம் போன்ற துறைகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இதேவேளை இப்பிரதேசத்தில் புதிதாக 500 குடும்பங்களை குடியமர்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .