2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சாரணர் கலைக்கூறு-I பயிற்சியை முடித்தவர்களுக்கு பதக்கம் அணிவிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களில்  சாரணர்  கலைக்கூறு-I பயிற்சியை முடித்தவர்களுக்கான பதக்கம்  அணிவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழ்மை மாலை புத்தளம் பாத்திமா கல்லூரியில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டத்தில் முதன் முறையாக தமிழ் மொழி மூலம் நடத்தப்பட்ட சாரணர் பயிற்சியை  37  பேர் நிறைவு செய்து பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.  

இந்நிகழ்வில் சாரணர் தேசிய பயிற்சி தலைவர் எம்.எச்.எம்.மன்சுர்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டு பதக்கங்களை அணிவித்தார்.

புத்தளம் மாவட்ட உதவி சாரணர் இயக்க ஆணையாளர் நியுட்டன் சிறிமான்னவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பதக்கங்களை அணிவித்தார்.

 

 

 


  Comments - 0

  • haseen Sunday, 17 October 2010 04:18 PM

    மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தை உருவாக்க ஒரு சிறந்த வழியாக சாரண்யம் காணப்படுகின்றது .புத்தளத்தில் இதனது வளர்ச்சி இப்போதுதான் ஆரம்பம்.என்றும் இதனது வளர்ச்சி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .