2025 மே 24, சனிக்கிழமை

கேரளாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூன் 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 100 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இந்த கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி, உச்சிமுனை கடற்பரப்பில் வைத்து மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த கடற்படையினர், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கற்பிட்டி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்துள்ளனர். (பத்மா குமாரி)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X