2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட இரவு 10 மணிக்கு பின் அனுமதி இல்லை

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் ஒயாமடுவில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட இரவு 10 மணிக்குப் பின் வருவோர் உள்நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணிவரை கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதோடு இறுதி நேரத்தில் நுழைவோர் அதிகாலை வரை கண்காட்சி வளாகத்தினுள் தரித்து நிற்பதனால் கண்காட்சி கூடங்களில் கடமையாற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் சேவையாற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X