2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தம்புள்ளை விபத்தில் ஐவர் படுகாயம்

A.P.Mathan   / 2011 ஜனவரி 06 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை - குருணாகல் வீதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் கடும் காயங்களுக்குள்ளாகி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எண்ணெய் தாங்கி ஒன்றும் லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்விபத்தின்போது லொரியிலிருந்த நான்கு பேரும் எண்ணெய் தாங்கியின் சாரதியும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் அவர்கள் தம்புள்ளை பிரதான வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .