2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

பாம்பு தீண்டி மூவர் மரணம்

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுர மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் விஷ பாம்புகள் தீண்டி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரம்பாவ, பள்ளம் குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான கமல் வைத்தியரத்ன, பஹலமாறகஹவௌ பகுதியைச் சேர்ந்த 37 வயதான லக்ஷமன் பிரதீப் மாரசிங்க, சிவலாக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான எச்.எம்.விஜேரத்ன ஆகியோரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்களாவர்.

இவர்கள் மூவரும் தத்தமது விவசாய நிலங்களிலிருந்து வீடு திரும்பும் போதே விஷ பாம்புகள் தீண்டியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X