2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீட மாணவ சங்கத்திற்கு தடை

Super User   / 2011 டிசெம்பர் 03 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீட மாணவ சங்கத்தை கால வரையறையின்றி தடை செய்துள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கே.எச்.நந்தசேன இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சாலியபுரவில் அமைந்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழக  வைத்திய பீட மாணவர்கள் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சங்கத்தின் செயற்பாடுகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் தடைசெய்துள்ளதாக உப வேந்தர் அறிவித்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி வைத்திய பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த உபவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளை மாணவர்கள் தடுத்து வைத் திருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உப வேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • fowz.real Sunday, 04 December 2011 06:04 AM

    பல்கலைகழக மாணவர்களின் தேவைகள் உப வேந்தர் அவர்களால் சரியாக நிறைவேற்றபட்டிருக்குமேயானால், பல்கலைகழக செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்க தேவை மாணவர்களுக்கு ஏற்பட்டு இருக்காது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X