2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

எல்லை விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Super User   / 2012 ஜனவரி 31 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

அகில இலங்கை ரீதியில் எல்லை விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற புத்தளம், சின்னப்பாடு கந்தாள சிங்கள வித்தியாலய எல்லை விளையாட்டு மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் நியூட்டன் தலமையில் நடைபெற்ற இநநிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி, வட மேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.ரியாஸ், எஸ்ஏ.எஹியா. கற்பிட்டி பிரதேச சபை  தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அகில இலங்கை ரீதியில் எல்லை விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட சின்னப்பாடு கந்தாள சிங்களப் பாடசாலை மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X