Menaka Mookandi / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
விலச்சிய அரசினர் வைத்தியசாலையில் கடமை புரிந்த கர்ப்பிணித் தாதியொருவரை மது போதையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த சந்தேக நபரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத் ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார்.
அநுராதபுரம், பரஸன்கஸ்வௌ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த கர்ப்பிணித் தாதியினை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த போது அதிலிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் கட்டிலொன்றில் மோதி விழுந்ததில் குறித்த தாதியின் கையில் காயமேற்பட்டுள்ளதோடு தற்போது விலச்சிய அரச வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
ibnuaboo Friday, 10 February 2012 02:08 PM
மது மாது. இவர் என்ன வைத்தியசாலையை ..... விடுதி என்று நினைத்துக்கொண்டாரோ ? இவரது கேசை ஈரானுக்கு அனுப்பி வைத்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago