2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

நீர்கொழும்பு மீனவர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா)

எரிபொருள் விலையேற்றத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து நீர்கொழும்பு கடற்கரை வீதி தேவாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமக்கு இதுவரை உரிய பதில் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, மீனவர்கள் இன்றைய தினம் மூன்றாவது நாளாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு கடற்கரை வீதி தேவாலயத்திற்கு முன்பாக மீனவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அதனை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டதால் அந்த இடத்தில் மக்கள் பெருமளவில் கூடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X