Kogilavani / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயத்தின் தேவைக்காக சிறிய பிரதி பண்ணும் இயந்திரம் ஒன்று புத்தளம் மாவட்ட நாடாளுமன்றமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரதி பண்ணும் இயந்திரத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.றபாய்தீன் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றபோது இயந்திரத்தை பாலித ரங்கே பண்டார எம்.பி அதிபரிடம் கையளித்தார்.
பெருக்குவட்டான் பிரதேச ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.எம்.பைறூஸ், ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றன.
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
Jaleel Secretary Thursday, 16 February 2012 01:32 AM
எனது இரு நண்பர்களான பைரூஸ், அதிபர் ரிபைதீன் உங்கள் இருவருக்கும் நன்றி .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago