2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

'மதுபோதையற்ற கிராமத்தை உருவாக்குவோம்' விளக்கமளிக்கும் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி சங்கம் ஏற்பாடு செய்த 'மதுபோதையற்ற கிராமத்தை உருவாக்குவோம்'  என்னும் தலைப்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று பத்துளுஓயா சனசமூக நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

குடி மற்றும் போதைப்பொருட்களின் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் துசார அபேரத்ன மற்றும் முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜிவ அலவத்த விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை அமைச்சர் சனத் நிசாந்த, அரச அதிகாரிகள் உட்பட மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X