2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அறிவியல் சஞ்சிகை வெளியீடும் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும்

Kogilavani   / 2012 மார்ச் 08 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

 

கல்விக்கும் சமாதானதிற்குமான அமைப்பின் வெளியீடான அறிவியல் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் புத்தளத்தின் கல்வித் துறைக்கும், கணிதப் பாடத்துறையிலும் அரும் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எஸ்.எம்.றபீகை கௌரவிக்கும்  நிகழ்வும் நேற்று புதன்கிழமை மாலை புத்தளம் என்.பீ.ஜ.கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் பிரதம அதிதியதாக கலந்து கொண்டு ஆசிரியர் றபீக்கிற்கு கணித ஞானி என்ற பட்டத்ததை வழங்கியதுடன், அவருக்கான நினைவு சின்னத்தையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது தொழில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழகள்; என்பனவும் வழங்கப்பட்டன.

கல்வி அமைச்சின் முன்னால் பணிப்பாளர் நாயகம் எம்.ஈ.எச.எம்.மஹ்ருப் மரைக்கார், சட்டத்தரணி புஆத், புத்தளம் பிரதி கல்வி பணிப்பாளர் ஆர்.எஸ்.ஈ.புஷ்பராஜன் உட்பட பலரும் இதன்போது கலந்து கொண்டனர். 

    

           -  

 


You May Also Like

  Comments - 0

  • Dr. Mohamed Thahir Asmil Thursday, 08 March 2012 04:10 PM

    I highly appreciate the valuable services rendered by Mr A. S. M Rafeek during his entire tenure in the Puttalam area. I wish him all the best in his all future endeavours.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X