2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Super User   / 2012 ஏப்ரல் 01 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ். எம். மும்தாஜ், அப்துல்லாஹ்)


இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் புத்தளம் மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்காக;  நடாத்தப்பட்ட இரு நாள் செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவுபெற்றது.

புத்தளம் - குருநாகல் வீதியில் அமைந்துள்ள றோயல் கிரீன் கார்டன் ஹோட்டலில் இச்செயலமர்வு நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடைந்தது.

ஊடகவியல் ஒழுக்கக்கோவை எனும் தலைப்பிலேயே இச்செயலமர்வு இடம்பெற்றது.  புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 20 தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தமிழ் பிரிவு முறைப்பாட்டு அதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூசைன் மற்றும் இலங்கை இதழியல் கல்லூரி விரிவுரையாளர் தேவ கௌரி ஆகியோர் ஒழுக்கக் கோவை தொடர்பில் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இச்செயலமர்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் பத்திரிகையியல் வழிகாட்டி நூலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X