2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

இன்றும் சிகிரியாவில் குளவிகள் அட்டகாசம்

Menaka Mookandi   / 2012 மே 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியாவை பார்வையிடச் சென்ற உல்லாசப் பயணிகள் மீது இன்று சனிக்கிழமையும் குளவிகள் தாக்கியதால் வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் குளவிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட நிலையில், பெருமளவில் பாதிக்கப்பட்ட 50பேர் மாத்திரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சீகிரியாவுக்கு பிரவேசிக்கும் பாதை இன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சிகிரியாவைப் பார்வையிடுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை சென்ற உல்லாசப் பயணிகள் மீதும் குளவிகள் கொட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X