2025 ஜூலை 16, புதன்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

Super User   / 2012 மே 07 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எப்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி பிரதேசத்தில் கஞ்சா மறைத்து வைத்திருந்த ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் பற்றி கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ஒரு தொகை கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு புத்தளம் பொலிஸாரிடம் குறித்த சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .