2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்

Suganthini Ratnam   / 2012 மே 08 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (ஆகில் அஹமட்)

ஹபரணை 32ஆம் மைல்கல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் வானின் சாரதி பலியானதுடன், 10 பேர்  காயமடைந்துள்ளனர்.

மருதமுனையைச் சேர்ந்த எம்.எச்.ஏ.றொஷான் (வயது 35) என்பவரே பலியானவராவார்.

கொழும்பிலிருந்து மருதமுனை நோக்கி வந்துகொண்டிருந்த வான் வாய்க்காலில் வீழ்ந்து பின்னர் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. சாரதி தூக்கமயக்கத்தில் வானை செலுத்தியிருக்கலாமென சந்தேகிப்பதாக ஹபரணைப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். படுகாயமடைந்த 3 பேரும் உடனடியாக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த பெண் ஆபத்தான நிலையிலுள்ளதைத் தொடர்ந்து அவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X