2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஜூலை 24 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆகில் அஹமட்)


ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அநுராதபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஒரு மாத காலத்துக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை திறந்து கல்வியை தொடருவதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுத்தருமாறு கோரியே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X