2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

தவணைக் கொடுப்பனவு முறையில் வாங்கிய லொறியை பாகங்களாக கழற்றி விற்க முனைந்தவர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

தவணைக் கொடுப்பனவு முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட லொறி ஒன்றை அதன் கட்டணங்களைச் செலுத்தாது மோசடி செய்துள்ளதுடன், லொறியை கழற்றி உதிரிப்பாகங்களாக விற்க முயன்றதாக கூறப்படும் லொறி உரிமையாளர் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்று புதன்கிழமை வென்னப்புவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த லொறியின் உரிமையாளர் தான் லொறிக்குரிய லீசிங் மாதத் தவணைக் கட்டணங்களைச் செலுத்த தவறியுள்ளதுடன் அந்த லொறியின் பாகங்களை பஞ்சிகாவத்தை பகுதியிலுள்ள  உதிரிப்பாகங்களுக்கு விற்கும் குழுவினருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வென்னப்புவ பொலிஸார் அங்கிருந்த ஐவரைக் கைதுசெய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் லொறியின் நபரையும் நேற்று புதன்கிழமை காலை வென்னப்புவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வென்னப்புவ பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X