2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்லாஹ்


புத்தளம் மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட டப்ளிவ்.ஏ.டீ.பீ. கித்ஸ்ரீ கனேகம இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

புத்தளம் பொலிஸ் நிலையம் முன்பாக புதிய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வரவேற்பு இடம்பெற்றதோடு மரியாதை அணி வகுப்பும் இடம்பெற்றது. 

இதன் பின்னர் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாயத்தில் கித்சிரி கனேகல தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேவிக்ரம உட்பட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X