2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் இளைஞன் பலி

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனமூலை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (12) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முந்தல் சமீரகம கிராமத்தைச் சேர்ந்த அப்துல் நாசர் முஹம்மது இர்பான் (வயது 20)  எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து, படுகாயமடைந்த குறித்த இளைஞர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .