2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமாம்

A.P.Mathan   / 2013 மார்ச் 06 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுவிடும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்ட விடயத்தை விமான போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன முற்றாக மறுத்துள்ளார்.

”பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படமாட்டாது. இதன் இரண்டாம் கட்ட விஸ்தரிப்பு பணிகள் எதிர்வரும் 2015ஆம் ஆண்டில் பூர்த்தியடையவுள்ளது. இது பூர்த்தியானதும் 15 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வசதி இந்த விமான நிலையத்துக்கு இருக்கும். கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்தின் மூலம் 7.2 மில்லியன் பயணிகள் கையாளப்பட்டிருந்தனர். விரைவில் பிரிட்டிஷ் எயார்வேஸ் மற்றும் கொரியன் விமான சேவைகளின் விமானங்களையும் கையாளவுள்ளது. எனவே இந்த விமானநிலையம் மூடப்படும் என்பது பொய்யான வதந்தியாகும்” என அவர் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .