Gavitha / 2016 ஜூன் 13 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ரயர்களுக்கு அதிகரித்து வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேவைகளை சமாளிப்பதற்கு றேடியல் டயர் உற்பத்தி ஆற்றலை கணிசமான அளவு அதிகரிக்க CEAT Sri Lanka அடுத்த 12 மாதங்களில் 800 மில்லியன் ரூபாயை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
றேடியல் சந்தையில் தற்போது 30 சதவீத பங்குகளை கொண்டிருப்பதுடன் இலங்கையின் காற்றடைத்த டயர் தேவையில் சுமார் அரைவாசியை நிறைவேற்றி வரும் இந்நிறுவனம் தற்போதைய முதலீட்டின் பயனாக றேடியல் டயர் உற்பத்தியை 75 சதவீதத்தினால் அதிகரித்து 40,000த்திலிருந்து 70,000 டயர்கள் வரையிலான உற்பத்தியைப் பெற முடியுமென தெரிவித்துள்ளது.
CEAT Sri Lanka அதன் களனி தொழிற்சாலை தொகுதியில் கார்களுக்கும் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களுக்குமான உயர் திறனைக் கொண்ட டயர்களை உற்பத்தி செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் செலவிலான நவீன ஆலை ஒன்றை ஆரம்பித்து 2 வருடங்களின் பின்னர் உற்பத்தி ஆற்றலை மேலும் அதிகரிப்பதற்கான இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
31 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
49 minute ago