2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தேயிலையின் வரலாற்றுக் கதைகள்

R.Tharaniya   / 2025 ஜூன் 23 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வளம்மிக்க ஊவா மாகாணத்தின் பரந்துபட்ட நிலப்பகுதிகளுக்கு மத்தியில், Aislaby Estate, சுத்தமான இலங்கை தேயிலையின் தனித்துவமான பாரம்பரியத்திற்கு சான்றாக திகழ்கிறது. இலங்கை, அதன் பல்வேறுபட்ட தேயிலை வகைகளுக்காக உலகளவில் புகழ்பெற்றது.

ஒவ்வொரு தேயிலையும் தனித்துவமான மற்றும் சிறந்த தேனீர் பானங்களை உருவாக்கும் தனித்துவமான சீதோஷன-காலநிலை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு சுவைகளை கொண்டுள்ளது. தேயிலை பயிற்சியில் சிறந்து விளங்கும் மையமாக இலங்கை தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இந்த சுறுசுறுப்பான தேயிலைப் பின்னணியில் Aislaby Estate அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தரம் மற்றும் தேயிலை உற்பத்தியில் புத்தாக்கமான உறுதியான ஈடுபாட்டைக் கொண்ட பெருமைமிக்க பாரம்பரியத்துடன், இந்த தோட்டம் இன்று Malwatte Valley Plantations Limited நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

வரலாற்றில் வேரூன்றிய பாரம்பரியம்

Aislaby Estate இன் பயணம் 1920 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, அப்போது ஊவா மாகாணத்தின் பசுமையான மலைகளாலும் தனித்துவமான காலநிலையாலும் ஈர்க்கப்பட்ட திரு Norman Bostock Aislaby தேயிலை தோட்டத்தை வாங்கி தேயிலைக் கன்றுகளை நட ஆரம்பித்தார்.

அவர் தான் வாழ்ந்த நாடான North Yorkshireஇல் உள்ள மாவட்டத்தின் பெயரிலிருநது ‘Aislaby’ என்ற பெயரை தனது தோட்டத்திற்கு வைத்தார். இறுதியில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவராக உயர்ந்த தனது மகன் மார்க் உடன் சேர்ந்து, இந்த சொத்தை ஊவா மாகாணத்தின் முன்னணி தேயிலை தோட்டமாக மாற்றினார்.

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரச தோட்டங்களுக்கு பெயர் பெற்ற மதிப்புமிக்க Malwatte மண்டலத்தை வரலாற்று ரீதியாக பின்னிப்பிணைத்து, அதன் செழுமையான பாரம்பரியத்தை பாதுகாத்துக்கொண்டே நவீன வேளாண்மை முறைகளை கடைப்பிடித்தது.

நிலப்பரப்பினால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் இருந்தபோதிலும், Aislabyஇன் பெரும்பகுதியை Kirchchyan பிரிவில் அவர் கட்டிய அவரது சின்னமான "Bostock’s Chair"இல் இருந்து திரு Bostock செயல்பாடுகளை மேற்பார்வையிட்டார்.

தொலைநோக்கியைப் பயன்படுத்தி அவர் அந்த மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொண்டு தேயிலை வயல்களை உன்னிப்பாக கண்காணிப்பு செய்தார்.
தேயிலை உற்பத்தியிலும் சமூக தாக்கத்திலும் சிறந்து விளங்கல்
Aislaby Estateஇன் சமரசமற்ற தரத்திற்கான அர்ப்பணிப்பு ஒவ்வொரு கோப்பை தேனீரிலும் பளிச்சென்று பிரதிபலிக்கிறது.

1936 ஆம் ஆண்டில் 1,218 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்ட இந்த தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலை, Rainforest Alliance, ISO 22000, ETP மற்றும் GMP சான்றிதழ்கள் உட்பட சிறந்த தரக் கட்டுப்பாடுகளின் கீழ் இயங்குகிறது. இந்த கடுமையான நடவடிக்கைகள், ஒவ்வொரு தேயிலை தொகுப்பும் தூய்மை மற்றும் சுவையின் உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது, இது இலங்கையின் சிறந்த தேயிலைகளில் சிலவற்றின் உற்பத்தியாளர் என்ற Aislaby Estateஇன் நற்பெயரை நிலைநிறுத்துகிறது.

மேலும், வறண்ட வட இந்திய பாலைவனங்களில் இருந்து தோன்றும் காய்ந்த 'Kachan' காற்றுகள், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை கிழக்கு சரிவுகள் மற்றும் Malwatte மண்டலம் வழியாக வீசி, Aislaby தேயிலையின் சுவையை மேம்படுத்தி, போட்டியாளர்களிடையே தனித்து நிற்பதற்கு காரணமாகிறது.

"சுத்தமான, உயர்ந்த தரம் வாய்ந்த தேயிலையை உற்பத்தி செய்வதில் Aislaby Estateஇன் அர்ப்பணிப்பு நாங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளிலும் இருதயத்தில் உள்ளது. இந்த தோட்டத்தின் செழுமையான பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையை கடைப்பிடிப்பதற்கும் நாங்கள் பாடுபடுகிறோம்" என்று Malwatte Valley Plantations PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Lucas Bogtstra தெரிவித்தார். 

இந்த தோட்டம் நிலையான வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஊவா மாகாணத்தின் இயற்கை அழகு மற்றும் பல்லுயிரியலையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. மண் வள பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவ நுட்பங்கள் ஆகியவை சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்து, தேயிலை பயிரிடுவதை நீண்ட காலத்திற்கு உறுதி செய்வதற்கான Aislaby தோட்டத்தின் நிலையான நடைமுறைகள் ஆகும்.

தனது வணிக வெற்றிக்கு அப்பால், Aislaby Estate நிலையான தன்மை மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. இது உள்ளுர் குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய வேலைவாய்ப்பை வழங்கி, பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்துகிறது.

தோட்டம் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிலையான தன்மை மற்றும் சமூக பொறுப்புணர்வை வலியுறுத்துவதன் மூலம், Aislaby Estate அதன் செயல்பாடுகள் பிராந்தியம் முழுவதும் பயனடைய செய்கிறது.

கொழுந்து முதல் தேனீர் கோப்பை வரை

Aislaby Estate என்பது 463 ஹெக்டேயர் வளமான நிலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை கன்றுகளால் நன்கு பராமரிக்கப்படும் தோட்டமாகும், அதில் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் புதிய தேயிலை உற்பத்தியை உறுதிசெய்வதற்கு சரியான நிலைமைகளைப் பேணுவதன் மூலம் உண்மையான தேயிலை சுவையை வழங்குவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள், ஒவ்வொரு முறையும் புதிய தேயிலை தயாரிப்பை உறுதிசெய்து, இலங்கைகைத் தேயிலையின் பெயரைத் தொடர்ந்து சிறப்பின் அடையாளமாக நிலைநிறுத்த ஊக்குவிக்கின்றனர்.
அறுவடைக்குப் பிறகு, அனைத்து தேயிலை இலைகளும் உயர்தர உற்பத்தி செயல்முறைக்காக தோட்டத்திலேயே அமைந்துள்ள அதிநவீன தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அனைத்து தயாரிப்புகளும் சர்வதேச தரத்தின் மேம்பட்ட உற்பத்தி செயல்முறையின் கீழ் தர சான்றிதழ்களின்படி தயாரிக்கப்படுவதுடன் இதன் விளைவாக, தேயிலை ஆர்வலர்களின் இதயங்களை மகிழ்விக்கும் புதிய தேயிலை சுவைகளைச் சேர்ப்பதன் மூலம் Aislaby Estateஆனது சுவையான மற்றும் தரமான Aislaby தேயிலையை நுகர்வோருக்கு வழங்க முடிந்தது.

Aislaby Estate மற்றும் இலங்கையின் தேயிலைத் துறையின் எதிர்காலம்
Malwatte பெருந்தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள Aislaby, Chelsea, Uva Highlands, Neluwa மற்றும் St. James ஆகிய அனைத்து தேயிலை தோட்டங்களும் இந்நாட்டின் தேயிலை தொழிலுக்கு பாரிய பலத்தை வழங்குகின்றன.

குழுவின் பகிரப்பட்ட நிபுணத்துவம் மற்றும் வளங்கள் தோட்டத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதால் Aislaby இங்கு தனித்துவமானது. அதன் காரணமாக, தரம், பேண்தகைமை மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை வெளிப்படுத்தி இலங்கையின் தேயிலை தொழிற்துறையில் சிறந்த முன்னணி நிறுவனமாக Aislaby தோட்டத்திற்கு மாறியுள்ளது.

நிலைத்தன்மை மற்றும் தரத்தை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, புதிய தொழில்நுட்ப மூலோபாய நடவடிக்கைகள், செய்கை முறைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடுகள் மூலம் சிறந்த கண்டுபிடிப்பாளராக மாறுவதற்கு Aislaby Estate செயல்பட்டு வருகிறது.

இந்த அனைத்து விடயங்களினூடாகவும் இலங்கையின் அடையாளமான 'சிலோன் டீ' வர்த்தக நாமத்தை உலகில் நிலைநிறுத்துவதில் அவர்கள் வெற்றியடைவார்கள் என நம்புகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .