2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருளை விநியோகிக்க அமெரிக்க நிறுவனம் வருகிறது

Editorial   / 2023 நவம்பர் 21 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மெரிக்கவின்   ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டுச் சபைக்கும் இடையில் பெற்றோலியப் பொருட்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் 110 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான ஆர்.எம். பார்க்ஸ், இந்த உடன்படிக்கையின் மூலம் பார்க்ஸ் கம்பனிக்கு ஜெல் தயாரிப்புகளை இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் அதற்கமைவாக எதிர்காலத்தில் ஆர்.எம். பார்க்ஸ் மற்றும் ஜெல் இணைந்து 200 பெட்ரோல் நிலையங்களை திறக்கும்.

அந்த பெட்ரோல் நிலையங்களில் சூப்பர் ஸ்டோர்கள், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .