2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 09 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 07 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி  நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.

இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

02 படகுகளில்  வந்த 09 இந்திய மீனவர்களையும் வியாழக்கிழமை  (06) காலை கைதுசெய்த கடற்படையினர், இவர்களை  தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது இவ்வாறிருக்க, தலைமன்னார் கடற்பரப்பில் புதன்கிழமை (05) இரவு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .