2025 ஜூலை 16, புதன்கிழமை

'வன்னி 14' புகைப்பட கண்காட்சிக் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா ஊடகவியளாலர்களின் புகைப்பட தொகுப்பை உள்ளடக்கிய 'வன்னி 14' கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியாவில்  நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளாகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வவுனியா மாவட்டச் செயலகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் காட்சிக்கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், சிறந்த புகைப்படங்களுக்கான  விருதுகளும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வவுனியா தெற்கு பிரதேச செயலாளரின் சிந்தனைக்கமைய செயற்படுத்தப்படவுள்ள இக்கண்காட்சியில், வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X