2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 28 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேரையும்; எதிர்வரும் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி மீனவர்கள் 19 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28)  காலை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தியா, தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மேற்படி   மீனவர்கள் 19 பேரையும் 05 படகுகளுடன் புதன்கிழமை (26)  இரவு கடற்படையினர் கைதுசெய்தனர்.

தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வியாழக்கிழமை (27) மீனவர்கள் 19 பேரும் வைத்தியப் பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர், மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தலைமன்னார் பொலிஸாரிடம் மீனவர்கள் 19 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் 05 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரும்   எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .