2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 21 இந்திய மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 20 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தலைமன்னார் கடற்பரப்பில் 05 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்   இந்திய மீனவர்கள் 21 பேரை புதன்கிழமை (19) இரவு கடற்படையினர் கைதுசெய்ததாக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு வியாழக்கிழமை (21) காலை கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர்,  மன்னார் வைத்தியசாலையில்  மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன் பின்னர் 21 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின் இவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .