2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லைத்தீவு கோட்டை கைப்பற்றல்: 211ஆவது ஆண்டு நிறைவு அனுஷ்டிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வன்னி பிரதேசத்தை இறுதியாக ஆண்ட வன்னியனாரான பண்டாரவன்னியன், முல்லைத்தீவு கோட்டையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 211ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று திங்கட்கிழமை (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலைக்கு காலை 8.45 மணியளவில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா வரவேற்புரை, நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவிகளால் வரவேற்பு நடனம், கலாபூசணம் இ. சிவசோதி தலைமையுரை, சிரேஷ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நினைவுப்பேருரை, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் கவி மன்றம், வவுனியா கலைத்தொடர்பு மையம் தேசிய வீரன் பண்டரவன்னியன் நாடகம் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, ஜனாதிபதி சட்டத்தரணி எம். சிற்றம்பலம், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X