2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் மனித புதைகுழியை ஆயர் பார்வையிட்டார்: இதுவரை 40 எலும்பு கூடுகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 18 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார்,திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி 09 ஆவது தடவையாக இன்று சனிக்கிழமை  தோண்டப்பட்ட போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை நேரில் சென்று பார்வையிட்டார்.

நேற்றைய தினம் மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 40 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக இன்று சளிக்கிழமை  காலை 8.30 மணி முதல் காலை 11 மணிவரை குறித்த மனித புதைகுழி அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது முதலில் இரண்டு மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டதோடு மேலும் ஒரு மனித எழும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை வரை 37 எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளின் தொகை 40 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்றனி விக்டர் சோசையும் மனித புதை குழி உள்ள இடத்தை பார்வையிட்டார்.

இந்த மனித புதைகுழி எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து  திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .