2025 ஜூன் 30, திங்கட்கிழமை

3 ஆண்டுகளில் முல்லைத்தீவில் மலேரியா நோயாளர்கள் இனங்காணப்படவில்லை

George   / 2016 மே 06 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இவ்வருடம் இதுவரையிலான காலப்பகுதி வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவொரு மலேரியா நோயாளியும் இனங்காணப்படவில்லை' என முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கத்தின் பொறுப்பதிகாரி டி.விஜிதரன் தெரிவித்தார்.

மலேரியா தடுப்பு இயக்கம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியவற்றின் ஏற்பாட்டில் மலேரியா தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவையாளர் பணிமனையில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

'முல்லைத்தீவு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு 38 பேரும், 2012ஆம் ஆண்டு 9 பேரும் மலேரியாத் தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், வெளிமாவட்;டங்களிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகை தந்தவர்களாகவும், முல்லைத்தீவிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று வந்தவர்களாகவும் இருந்தனர்.

மலேரியா தொற்றுத் தொடர்பில் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் செய்யப்பட்டது. இதன்பின்னர், எந்தவொரு மலேரியா நோயாளியும் மாவட்டத்தில் இனங்காணப்படவில்லை. இது தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும். மலேரியா தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் வருடாந்தம் 20 ஆயிரம் பேருக்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்து. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும், தொழில் நிமித்தம் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களும் மலேரியாத் தொற்றுத் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருபவர்களும் மலேரியா தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X