Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை இருபதாயிரத்துக்கும் அதிகம் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்ற நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று வியாழக்கிழமை குறித்த அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணியொன்று மன்னாரில் இடம்பெற்றது.
இதனைத்தொடர்ந்து, குறித்த அமைப்பு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
'பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மையான நிலை என்ன? காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை இருபதாயிரத்துக்கும் அதிகம் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்கள் அனைவரும் உடனடியாக அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த குடும்பங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அழ வைக்கப்படுவார்கள்?
யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அரசியல் கைதிகளுக்கான ஒரு தீர்வு எட்டப்படாமை அரசாங்கத்தின் கையாளாகாதத் தன்மையா? அல்லது அசமந்த போக்கா? தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது ஏன் அரசாங்கத்துக்கு தெரியவில்லை.
அரசியல் கைதிகள், பொது மன்னிப்பளிக்கப்பட்டு நிபந்தனை ஏதும் அற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்ட வரலாறு எமது அரசியல் வரலாற்றில் உண்டு.
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களும் பாலியல் வன்முறைகளும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளன. சமூக பிரச்சினையாக உருவெடுத்து அதுவே பெரிய சவாலாக மாறியுள்ளது.
வடமாகாண கரையோரம் வாழ் மீனவர்கள் வகை தொகையற்ற இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வருகின்றமையால் பலவிதமான பாதிப்புக்குள்ளாகின்றனர். வருமான குறைவு ஏமாற்றம் போன்ற துயரங்கள் ஏற்படுகின்றன.
இந்த 4 விடயங்களும் வட கிழக்கு மக்களை உளவியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளாக அமைந்துள்ளன.
எனவே, இவற்றுக்கான நிரந்தர தீர்வை விரைவில் அரசாங்கம் ஏற்படுத்தி மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இக்கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது' என மன்னார் மாவட்ட, போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
46 minute ago