2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'கால்நடைகளைக் கட்டுப்படுத்தவும்'

George   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கால்நடைகளின் தொல்லைகளை எதிர்கொண்டிருப்பதன் காரணமாக, கால்நடைகளைக் கட்டுப்படுத்துமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரணைமடுக்குளத்தின் கீழ் காலபோகம், சிறுபோகம் காலங்களில் கால்நடைகளின் தொல்லையே பெரும் பிரச்சனையாக உள்ளதாகவும் விவசாய அமைப்புகள் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் முயற்சிகளை எடுத்தாலும் கூட, கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் காணப்படுகின்ற கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இனங்காணப்படாததால், பயிர்ச் செய்கை நிலங்களை நோக்கியே கால்நடைகள் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இரணைமடுக்குளத்தின் கீழ் 800 ஏக்கரில் சிறுபோக முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், கால்நடைகளைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .