2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘காலக்கெடு தேவையில்லை’

Kogilavani   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

“காலக்கெடு எங்களுக்குத் தேவையில்லை. எமது கையால் படையினரிடம் ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளினுடைய பதிலை, இந்த நல்லாட்சி அரசாங்கம் தரவேண்டும். அதுவரை எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நேற்றுத் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களுக்கான உரிய பதிலை அரசாங்கம் வழங்கவேண்டும் எனக்கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், கிளிநொச்சி கந்தசுவாமி முன்றலில் கடந்த திங்கட்கிழமை (20) முதல் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டம், நேற்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“காணாமல் போனவர்களின் உறவுகள், தங்களுடைய உறவுகளை மீட்டுத்தருவதற்கு அல்லது அவர்கள் பற்றிய பதிலைத் தருவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் இனியும் காலக்கெடு விதிக்கக்கூடாது. எங்கள் கைகளால் இராணுவத்திடம்  ஒப்படைத்த மற்றும் கடத்தப்பட்ட எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற பதிலைக் கூறவேண்டும். இதற்கு சர்வதேச சமுகம் இலங்கை அரசாங்கத்துக்கு இலங்கைக்க அழுத்தம் கொடுக்கவேண்டும்” எனத் தெரிவித்து செவ்வாய்கிழமை (21) ஐ.நா செயலாளருக்கான மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.

“யுத்த முடிந்தும் எட்டு ஆண்டுகளாகி விட்டன. நல்லாட்சி என்று சொல்லுகின்றார்கள். எங்களுடைய உறவுகளைத்தேடி, அவர்களுக்கான பதிலைத்தேடி, நாங்கள் உணவு இன்றி உறக்கமின்றி தெருவிலே நிற்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு சரியான பதிலை இந்த நல்லாட்சி அரசாங்கம் கூறவேண்டும். அதுவரை எங்களுடைய இந்தப்போராட்டத்தை நாங்கள் கைவிடப்போவதில்லை” என, அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .