Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 17 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நாச்சிக்குடா கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்களும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாச்சிக்குடா கடலில் அனுமதிப்பத்திரமின்றி கடந்த 14ஆம் திகதி கடலட்டை பிடித்த 7 பேரை கடற்படையினர் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து 80 கிராம் நிறையுடைய கடலட்டையொன்று கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
7 பேரும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, நீதிவான் ஜெ.பிரபாகரன், மீனவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்து விடுவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago