Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 01 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் திணைக்களங்களுக்கும் சொந்தமான காணியை தம்வசப்படுத்தி வைத்திருக்கும் இராணுவத்தினர், அந்தக் காணிகளை விடுவித்து வெளியேற வேண்டும் என கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம், தர்மபுரம் நெசவுச்சாலை மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.
இதன்போதே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிளிநொச்சியில் காணிகள் இல்லாமல் பெருமளவான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், மக்களின் விவசாய நிலங்களை இராணுவம், தம் வசப்படுத்தி வைத்துள்ளது.
எனவே, அக்காணிகளை மக்களிடம் மீளக்கையளித்து வெளியேறவேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
6 hours ago