Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 10 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் வெற்றி பெற்றதன் பின்னர் தம்மை அரசர்களாக எண்ணாது மக்கள் சேவகர்களாக எண்ண வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவராகவும் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழுத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வவுனியாவில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தெரிவு செய்ததன் மூலம் மக்களுக்கு சேவை செய்பவனாக என்னை உருவாக்கியுள்ளீர்கள். நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் எவரும் தன்னை ராஜாவாக எண்ணினால் மக்களுக்கு சேவை செய்யமுடியாது.
என்னைப் பொறுத்த வரை நான் மக்களுக்கான சேவகனே. ஆகவே மக்கள் தங்கள் குறைகளையும் ஆலோசனைகளையும் தெரிவிப்பதனூடாகவே என்னால் அபிவிருத்தியை மேற்கொள்ளமுடியும்.
இன ஒற்றுமைகாகவே பல ஒப்பந்தங்கள் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் அவை ஏற்படுத்தப்பட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்படாமல் போய்விட்டன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
29 minute ago
35 minute ago