2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘நிலம் தரும் வரை போராட்டம் நிறைவுபெறாது’

Niroshini   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் இடம்பெறும் என, கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவின் கேப்பாப்புலவையும் சூரியபுரத்தையும் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்னால் முன்னெடுத்து வரும் போராட்டம், 5ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்தது.

கேப்பாப்புலவைச்சேர்ந்த 145 குடும்பங்களும் சூரியபுரத்தைச்சேர்ந்த 46 குடும்பங்களுமே, பொதுமக்களுக்குச் சொந்தமான 450 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, புதன்கி​ழமை (01), போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முல்லைத்தீவு இராணுவ முகாம், கேப்பாப்புலவு, சூரியபுரம் ஆகிய 528 ஏக்கர் காணிகளை உடைய கிராமங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .