2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் நிலவி வரும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து, புதிய ஆண்டில் மாணவர்களின் இயல்;பான கற்றல் செயற்பாடுகளுக்கு வழிவகை செய்யுமாறு பெற்றோர்கள் கோரிக்;கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு  உட்பட்ட முரசுமோட்டை முருகானந்தாக்கல்லூரியின் ஆளணி மற்றும் இதர வளங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளபோதிலும் போதிய வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பௌதீக வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.
கடந்த மூன்;றாம் தவணை வரைக்குமான காலப்பகுதியில் கல்;லூரியின் ஆறு வரையான வகுப்புக்கள் மிக ஆபத்தான நிலையில் சேதமடைந்து காணப்படும் தற்காலிக கொட்டகைகளிலேயே இயங்கி வந்துள்ளன.

மழை காலத்தில் மாணவர்கள் என்றுமில்லாதவாறு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு தமது கல்வியை தொடர்ந்து வந்தனர். 2016ஆம் ஆண்;டின் புதிய கல்வியாண்டில் மாணவர்கள் கற்கக் கூடிய வகையில் குறித்த தற்காலிக வகுப்பறை தொகுதிகளை புனரமைத்து மாணவர்களின் இயல்பான கற்றலுக்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்தித்தருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X