2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'பிரச்சினைகளை தீர்க்க தமிழ் தலைமைகள் முன்வரவில்லை'

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், முருங்கன் முச்சக்கரவண்டி சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு அவர்களின் தரிப்பிடம் மற்றும் சேவைகள் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக முரண்பாடான பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பல தடைவைகள் செய்தும் இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட முருங்கன் முச்சக்கரவண்டி சங்கத்தல் அங்கம் வகிக்கின்ற முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் வடமாகாண சபை உறுப்பனர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் இரட்ணசிங்கம் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

முருங்கன் முச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் சேவைகள் தொடர்பாக கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக அப்பகுதி முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் முருங்கன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ள போதும் பொலிஸார் அரசியல் அழுத்தம் காரணமாக பக்கச்சார்பாக நடந்து கொள்ளுகின்றனர்.

இப்பிரச்ச்னைகள் தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளும் அக்கறை  இன்றிச் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

அத்துடன், தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க தமிழ் அரசியல் தலைவர்கள் சரியான நடவடிக்கைகளை எடுத்து உரிய முடிவினைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடம் தொடர்பாக முருங்கன் முச்சக்கர வண்டி சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் 30 பேர் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றையும் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.

பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு கிடைக்காது விட்டால் நாளை வியாழக்கிழமை (18) முருங்கன் பஸ் நிலைய திறப்பு விழாவின் போது பாதிக்கப்பட்டுள்ள முருங்கன் முச்சக்கரவண்டி சங்கத்தல் அங்கம் வகிக்கின்ற முச்சக்கரவண்டி உரிமையாளர்களாகிய நாங்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்பினைத் தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக முருங்கன் முச்சக்கரவண்டி சங்கத்தல் அங்கம் வகிக்கின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் வடமாகாண சபை உறுப்பனர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீ.குணசீலன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்து. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X