2025 ஜூன் 28, சனிக்கிழமை

'பிரமிட்' முறையில் ஏமாற்றுவர்களை கைது செய்யவும்: நீதிமன்றம் உத்தரவு

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் 'பிரமிட்' என்ற முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் அனைவரையும் உடன் கைது செய்யுமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம், மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மன்னாரில் பொருட்களை விற்பனை செய்து 'பிரமிட்' முறையில் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் , வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போதே விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த உத்தரவைப்பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த முறையின் மூலம் பணத்தை கொடுத்து தாம் ஏமாந்துவிட்டதாக  மன்னார் வங்காலையைச் சேர்ந்த இருவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறையின் பிரகாரம், ஒருவருக்கு பொருளொன்று விற்பனை செய்யப்படும், அதற்கு அவர் பணம் செலுத்தவேண்டும், பணத்தை செலுத்தி பொருளை வாங்கியவர், மேலும் இருவரை இணைந்துகொள்ளவேண்டும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கும் தலா இரண்டு பொருட்கள் வழங்கப்படும்.

அந்த இருவரும், மேலும் நால்வரை இணைந்துகொள்ளவேண்டும். அந்த நால்வரிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும், இவ்வாறு மரவரிப்படம் முறையின் ஊடாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், அதிலிருந்து வரும் இலாபம் பின்னர் பகிர்ந்தளிக்கப்படும் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை நம்பி அவ்விருவரும் தலா 61 ஆயிரத்து 300 ரூபாவை அவர்களிடம் செலுத்தியுள்ளனர்.எனினும், அவ்விருவருக்கும் எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை.

இதனையடுத்தே,  மன்னார் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர். பின்னர், இந்த முறையின் ஊடாக ஏமாற்றியதாக கூறப்படும் இருவரையும், கைது செய்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.

அவ்விருவரும், இதே முறையின் ஊடாக இன்னும் பலரை ஏற்மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இவ்விருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த முறைமையின் ஊடாக ஏமாற்றுபவர்களை கைதுசெய்யுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .