2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'மேச்சல்தரை இன்மையே கால்நடைகள் வீதிக்கு வருகின்றன'

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் மேச்சல் தரை இன்மையாலேயே மாடுகள் வீதிக்கு வரவேண்டியுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகரசபையினால் வீதியோரங்களில் நிற்கும் மாடுகள் அண்மைக்காலமாக பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்படுவதுடன் மாடுகள் பாராமரிப்பு நிதியும் அறவிடப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் பல மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவையனைத்தும் நகரசபை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இச் செயற்பாடு தொடர்பில் கால்நடை வளர்ப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக உள்ளது. இது இங்குள்ள மக்களின் கலாசாரத்துடன் ஒன்றிய செயற்பாடு. குறிப்பாக விவசாயமானது வேலியடைத்தும் கால்நடை திறந்து விடப்பட்டும் வளர்க்கப்படும் நிலையே உள்ளது.

அதற்கு பிரதான காரணமாக மேச்சல்தரை இன்மை மற்றும் வயல் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளமை காரணமாக உள்ளது. இதன் காரணமாக மாடுகள் வீதிகளுக்கு வரும் நிலை உள்ளது. தற்போது வாழ்வாதார செயற்பாடு என அரசாங்கத்தினால் கால்நடைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் நகரசபையின் இச்செயற்பாடுகளுக்கு நாம் அதிகளவான நிதியை தண்டமாக செலுத்த வேண்டியுள்ளமையால் கால்நடை வளர்ப்பை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலை தொடர்ந்து வருமானால் மாடுகளை இறைச்சிக்கு விற்க வேண்டிய நிலையே எமக்கு ஏற்படும் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் கேட்டபோது,

வவுனியா நகரத்தில் அண்மைக்காலத்தில் கால்நடையால் விபத்துகள் அதிகரித்து வருகின்றது. எனவே நகரசபை விபத்துக்களை கட்டுப்படுத்த தன்னாலான சில செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. எனவே பல முறை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளை பிரதான விதீகளில் விடவேண்டாம் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடித்து தண்டம் அறவிடவேண்டிய நிலை ஏற்படும் என அறிவித்தல் வழங்கியிருந்தாம்.

எனினும், கால்நடை வளர்ப்பாளர்கள் அதனை உதாசீனம் செய்தமையினால் நாம் எமது செயற்பாட்டில் இறங்க வேண்டி ஏற்பட்டது. மேச்சல் தரை இல்லை என்பது உண்மையான விடயம்.

எனவே,இதனை கால்நடை வளர்ப்பாளர்கள் உரிய அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X