2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வைரவபுளியங்குளத்தில் இளைஞர்கள் அட்டகாசம் அதிகரிப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மாலை, இரவு வேளைகளில் இளைஞர்கள் அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில் தனியார் கல்வி நிலைய விளம்பர பலகைகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா, வைவபுளியங்குளம் கதிரேசு வீதி மற்றும் வைரவர் கோவில் வீதி என்பன தனியார் கல்வி நிலையங்களைக் கொண்ட பகுதியாகும். மாலை வேளைகளில் இப்பகுதியில் ஒன்று கூடும் இளைஞர்கள், அங்கு கல்வி பயில வரும் மாணவிகளுடன் சேட்டை புரிவதுடன், கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுடனும் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வைரவபுளியங்குளம் வைரவர் கோவில் வீதி மற்றும் இராசதுரை வீதி என்பவற்றில் உள்ள கல்வி நிலையங்கள் இரண்டினது விளம்பர பலகைகள் மீது செவ்வாய்கிழமை இரவு இளைஞர்கள் தாக்குதல் நடத்தி உடைத்து சேதப்படுதியுள்ளனர்.

இப்பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் தொடர்வதாகவும் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X