2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வாழ்வில் ஒளியேற்ற ஜனாதிபதி முன்வரவேண்டும்

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

எமது வாழ்வில் ஒளியேற்ற ஜனாதிபதி முன்வரவேண்டும் என வவுனியா மாவட்ட பயிர்செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வரவு செலவுத் திட்டத்தில் 2,000 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றோம். அத்திட்டம் வவுனியாவில்  எவ்விடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் குழப்பநிலை காணப்படுகின்றது. இருப்பினும் இத்திட்டம் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் நலன் கருதி கொண்டு வரப்படும் நிலையில் வவுனியா நகரில் உள்ள பலரும் இதனை தாண்டிக்குளத்தில் அமைக்க முனைகின்றனர்.

ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உற்பத்தியாளர்கள் பலரும் பின்தங்கிய கிராமங்களிலேயே வாழ்கின்றனர். தற்போது எமது தேவைகளுக்காக நாம் வவுனியா நகருக்கே வந்து செல்ல வேண்டியுள்ளது.  அதனால் பல இடர்களை எதிர்நோக்குகின்றோம். ஆனால், இத்திட்டம் கிராம மக்களை மையப்படுத்தி ஓமந்தையில் அமைக்கப்படுமாக இருந்தால் நாம் அதிக பயன்களைப் பெற முடியும்.

எமது உற்பத்திகளை அருகிலேயே விற்பனை செய்து வருமானம் ஈட்டக் கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எமது பகுதிகளும் அபிவிருத்தி அடையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. தாண்டிக்குளத்தில் அமைப்பதால் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக நாம் இந்த நிலையிலேயே வாழ வேண்டி வரும். எனவே, ஜனாதிபதி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் இந்த பொருளாதார நிலையத்தை ஓமந்தையில் அமைத்து ஏழைகள் வாழ்வில் ஓளியேற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை  ஜனாதிபதியுடன் வடமாகாண முதலமைச்சர் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X