2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியா மழையில் 104பேர் பாதிப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் பெய்த மழையினால் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மாதர் பின்னகமகிழங்குளம் கிராமத்தில் 30 குடும்பத்தை சேர்ந்த 104 பேர் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசத்தில் தொடர்ந்தும் மழைபெய்தால் இன்னும் பலர் பாதிகப்படுவர் என்று  அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்தார்.
வவுனியாவில் பெய்த கடும் மழையின் காரணமாக 30 குடும்பங்களை சேர்ந்த 104 பேர், மாதர் பின்னகமகிழங்குளம் கிஸ்ட உயர்தர பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான உலர் உணவு மற்றும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 3 வீடுகள் முழுமையாக சேதமைந்துள்ளதாகவும் 4 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தற்காலிக நலன்புரி நிலையத்தில் 30 குடும்பங்களை சேர்ந்த 104 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X