2025 ஜூன் 07, சனிக்கிழமை

154 கிலோ கிராம் கஞ்சா மீட்பு :சந்தேக நபர்கள் கைது

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் சிலாவத்துறை பகுதியிலிருந்து 15.4 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 154 கிலோ கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 சந்தேக நபர்களை இன்று (07) கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .