2025 ஜூலை 17, வியாழக்கிழமை

20 இந்திய மீனவர்கள் ஒப்படைப்பு

George   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, நேற்று வெள்ளிக்கிழமை (15) விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் இன்று (16) சனிக்கிழமை தலைமன்னார் கடற்படையூடாக இந்திய கடலோரக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி 4 படகுகளில் தலைமன்னார் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்களை கைது செய்த கடற்படையினர் விசாரணைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து குறித்த மீனவர்களின் விடுதலை தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த 20 மீனவர்களும் இந்திய சுதந்திர தினமான நேற்று வெள்ளிக்கிழமை (15) மடு சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.

20 இந்திய மீனவர்களும் பேசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன் இன்று (16) காலை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரின் படகுகளில் ஏற்றப்பட்டு இந்திய கடலோரக்காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X