2025 ஜூலை 23, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் 10,000 ரூபா தண்டம் விதித்தார்.

கிளிநொச்சி நகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரையும் மற்றுமொருவரையும் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததுடன், 10 கஞ்சா பொதிகளையும் கைப்பற்றியதாகவும்   கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நுகான் திலகரத்தின தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அண்மித்த வீடொன்றில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவ்வீட்டைச்  சோதனையிட்டபோது சின்னப்பிள்ளை ஒருவரின் காற்சட்டையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .