2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா விற்ற பெண்ணுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 11 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு 10,000 ரூபா அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டார்.

மேற்படி பெண் ஞாயிற்றுக்கிழமை (09) கிளிநொச்சி நகர் பகுதியில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, அப்பெண் வசமிருந்த 3 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினார்கள். தொடர்ந்து மேற்படி பெண்ணினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (10) ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .